ஏடிஎம் கொள்ளை எதிரொலி ; தீவிர வாகன சோதனையில் போலீசார்...தஞ்சாவூரில் பரபரப்பு!

ஏடிஎம் கொள்ளை எதிரொலி ; தீவிர வாகன சோதனையில் போலீசார்...தஞ்சாவூரில் பரபரப்பு!

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை நிகழ்வு நடைபெற்றதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள ஏடி.எம் மையங்களில் புகுந்த மர்மநபர்கள் 75 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத் உத்தரவின்படி வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் மற்றும் பிற மாவட்டங்களை இணைக்கும் 8 எல்லைகளில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com