அன்புஜோதி இல்லத்தில் காணாமல் போன 15 பேர் - தீவிர விசாரணை!!!!!

அன்புஜோதி இல்லத்தில் காணாமல் போன 15 பேர் - தீவிர விசாரணை!!!!!

விழுப்புரம் அன்புஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை  நடைபெற்று வருவதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

ஆட்கொணர்வு மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றரோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போன திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை மீட்டு தர வேண்டும் எனவும், அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கானின் நண்பர் ஹலிதீன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை

இந்த வழக்கில், காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட சபீருல்லா, அங்கு மரணமடைந்து இருக்கலாம் எனவும், அவரது அங்க அடையாளங்களுடன் ஒத்துப்போகும் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து உடலை அடையாளம் காட்ட அமெரிக்கவில் உள்ள உறவினரை தமிழ்நாடு அழைத்து வருவது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் என். நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் முடிவுகள்

2 மாத கால அவகாசம்

அப்போது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் சபீருல்லாவின் மனைவி மற்றும் மகள்  சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களின் இருப்பிடம் விரைவில் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது.மேலும், அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து 15 பேர் காணாமல் போனது தொடர்பான விசாரணை  நடைபெற்று வருவதாகவும் சிபிசிஐடி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்