கைது செய்யப் படுகிறாரா எச்.ராஜா.? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

கைது செய்யப் படுகிறாரா எச்.ராஜா.? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! 

நீதிமன்றம் மற்றும் காவல் துறையினரை அவதூறாக பேசிய வழக்கில்முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம். 

நீதிமன்றத்தை  அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில், "கடந்த  2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. அது தொடர்பாக திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் என் மீதும் பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காக ஏற்கனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது.

தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் நான்  தலைமறைவாக உள்ளதாக  தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஜுலை 23ல் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக  எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்."என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக  விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் மீது தமிழகம் முழுவதும் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்..

அதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டு 
எச். ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

அப்போது நீதிபதி, மனுதாரர் நீதிமன்றம், காவல் துறையை அவதூறாக பேசியுள்ளார். மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன் தான் அனுப்பியுள்ளது எனவே, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர் கொள்ள வேண்டும் என கூறி முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.