உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? ரகுபதி கேள்வி!

உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? ரகுபதி கேள்வி!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

காலாவதியான சட்டம்:

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதற்கான நிரந்தர சட்டத்திற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை, மாறாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். ஆனால், அதற்கான காலவரையறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆளுநரிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க: ரூ.25 கோடி மதிப்பில் 13 ஆயிரத்து 200 அரசுப் பள்ளிகளில் திட்டம் செயலாக்கம்...தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

யார் பொறுப்பு:

இந்த விவகாரத்தில் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது ஆளுநருக்கே வெளிச்சம் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டம் காலாவதி ஆகிவிட்டதால் ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்தான், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். அதே நேரத்தில், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.