இந்த 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இந்த 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
Published on
Updated on
1 min read

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இரண்டு நாளைக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஏனைய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com