"உதயநிதியின் மகன் அரசு விழாவில் பங்கேற்பது முறையல்ல" ஜெயக்குமார் பேச்சு!!

"உதயநிதியின் மகன் அரசு விழாவில் பங்கேற்பது முறையல்ல" ஜெயக்குமார் பேச்சு!!

மதுப்பழக்கத்தை அதிகரிக்க முழு மூச்சுடன் அமைச்சர் முத்துசாமி பாடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் எம்ஜிஆர் மன்ற தலைவர் பொன்னையன் தலைமையில், மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுக மாநாட்டிற்கான முன்னெடுப்புகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது .

அதிமுகவில் இணைவதற்கான உறுப்பினர் படிவங்கள் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1 கோடிக்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பூர்த்தி செய்து ஒப்படைக்கப் பட்டிருக்கும் நிலையில், இந்த வாரமே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கு கடைசி வராம் என்பதால் இன்று அதிமுக அலுவலகத்தில்  தங்கள்  விண்ணப்பங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

அப்பொழுது, "மதுப்பழக்கத்தை அதிகரிக்க முழு மூச்சுடன் அமைச்சர் முத்துசாமி பாடுபடுகிறார்" என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,  அமைச்சர் உதயநிதியின் மகன், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது, முறையான செயல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!