நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள்

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துகாட்டு சுதந்திர போராட்ட தியாகி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இந்திய அமைப்பியல் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர்.

நேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள்

எளிமையாகவே வாழ்

அரசியல்வாதி என்றாலே பணமும் சொத்தும் குவிக்க நினைக்கும் இந்த காலத்தில் தன் வாழ்நாள் முழுவதும் அரசியலை புனிதமாக கருதி தூய்மையான வாழ்வு நடத்தி எளிமையாகவே வாழ்ந்து மறைந்தவர்.கக்கன் 1908 மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி கிராமத்தில் பிறந்தார் தந்தை பூசாரி கக்கன் தாயார் குப்பு மனைவை சொர்ணம் பார்வதி 

கல்வி

தொடக்க கல்வியை மேலூரில் பயின்ற கக்கன் திருமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் படித்தார் வறுமை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதுமாணவ பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துகொண்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது அவருக்கு உதவியாக இருந்தார் தமிழகத்தின் பல இடங்களுக்கும் அவருடன் சென்றார்வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கக்கன் பங்காற்றி கைதாகி அலிப்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



அரசியல் பணிகள் 

1952 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் பின்னர் காமராஜர் ஆட்சியிலும் பக்தவசலம் ஆட்சியிலும் கக்கன் பொதுப்பணித்துறை ஆதிதிராவிடர் நல்வாழ்வு விவசாய்த்துறை உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்.


நேர்மைக்கு பல சான்றுகள்  

கக்கன் போலீல் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவது தம்பி விஸ்வநாதன் காவல்துறை பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார் அதற்கான பரீட்சையில் தேறி சப் இன்ஸ்பெக்டராக தேர்வானார்.இந்த மகிழ்ச்சியான செய்தியை அண்ணனிடம் தெரிவித்து ஆசி பெற சென்றார் செஉதி அறிந்த கக்கன் தம்பியை பாராட்டவில்ல்லை மாறாக ஐ.ஜியாக இருந்த அருளை தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு எந்த அடிப்படையில் விஸ்வநாதனை போலீஸ் துறைக்கு தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்.

அவர் விளையாட்டில் சிறந்தவர் என்ற அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஐ.ஜி. அருள் தெரிவித்தார்.உடனே கக்கன் தகுதி தெரியாமல் நியமனம் செய்திருப்பது முறையாகாது விஸ்வநாதனின் பணி ஆணையை ரத்து செய்தார்.ஒருமுறை மலேசிய மந்திரி கக்கனை சந்தித்து ஒரு தங்கபேனாவை பரிசாக வழங்கினார் அதை வாங்க மறுத்தார் க்ககன். எனினும் விடாப்பிடியாக அவர் வலியுறுத்தவே வேறு வழியில்லாமல் அதை பெற்றுகொண்ட கக்கன் ஊழியரை அழைத்து  பேனாவை அலுவலக பதிவேட்டில் பதிவு செய்யும் படி கூறினார்.

 இந்து அரசுக்கு அல்ல. உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்குத்தான் தந்தேன் என்று மலேசிய மந்திரி கூறியும் கககன் கேட்கவில்லை.நான் அமைச்சராக இல்லையென்றால் இந்த பேனாவாஇ தந்து இருப்பீர்களா ? மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள பரிசு பொருட்களை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துகொள்ளக்கூடாது என்று கூறி தங்கப்பேனாவை அவரிடமே திருப்பிகொடுத்து விட்டார்.

 

மேலும் படிக்க | டிசம்பர் 23...தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

ஆட்சி மாற அமைச்சர் பதவி போய்விட்ட நேரத்தில் சென்னையில் வாடகை வீடு தேடித்தெருத்தெருவாக  அலைந்தார் நகர பஸ்களில் பயணிகளுடன் பயணம் செய்தார். தன் வாழ்கையின் இறுதி காலத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கக்கன். மதுரை அரசு ஆஸ்பத்திரியில்  பொதுமக்களோடு சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


 அப்போது உடல்நல குறைவால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக பிரமுக ஒருவரி பார்க்க முதல் அமைச்சர் எம்.ஜி. ஆர் அங்கு போனார். அங்கே சிகிச்சை பெற்று வந்த செய்தி அறிந்த எம்.ஜி.ஆர். கக்கனை சாதாரண வார்டில் சிகிச்சை பெற்றதை பார்த்து கைகளை எடுத்து பிடித்து  தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் எனவும் வேறு ஏதாவது உதவு வேண்டுமா எனவும் கேட்டார் அதற்கு கக்கன் நீங்கள் வந்து பார்த்ததே போதும் எனவும் கூறினார்.

 உடனே எம்.ஜி.ஆர் மருத்துவமனையின் டீன் வரவழைத்து இவர் யார் என தெரியுமா இவரின் தியாக குணத்தினால் தான் நாம் இப்போது சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம் என கூறினார், அவரை உங்களுக்கு மரியாதையாக நடத்த தெரியாத எனவும் கேட்டார்.

மேலும் படிக்க | மீண்டும் கொரோனா அலை... “பாதுகாப்பான நிலையில் தான் தமிழகம்..” - அமைச்சர் மா.சு
 
 கக்கனின் மனைவி ஒருமுறை அரசு ஊழியரை மண்னெண்ணெய் வாங்கி வரும்படி கூறினார்.  இதை கவனித்த கக்கன் மனைவியிடம் இவர் அரசாங்கத்துக்கு ஊழியம் செய்பவர்  உன் வீட்டிற்கு ஊழியம் பார்க்க வரவில்லை என கூறினார். கக்கனின் மனைவி கண்ணீர் மல்க நின்றார், அதுமட்டுமின்றி மண்னெண்ணெய் கேனை வீட்டுக்குள் எடுத்துபோ என்று கூறினார்.

 

தோல்வியும் தமிழக அரசின் பணியும் 

அப்படிப்பட்ட மனிதர் 1967 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்பை இழந்தார் பின்னார் பொது வாழ்வில் இருந்து விலகினார். 1981 ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல்நலகுறைவால் சென்னையில் காலமானார்.

 கக்கன் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி இந்திய அரசு அவரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது . தமிழ அரசு சார்பில் மதுரையில் முழுவெண்கல சிலையும் கக்கனின் சொந்த ஊரான தும்பைப்பட்டியில் மணிமண்டபமும் அமைத்து கவுரவப்படுத்தியது.