ஈபிஎஸ்க்கு போட்டியாக வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்...!

ஈபிஎஸ்க்கு போட்டியாக வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்...!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பழகன் போட்டியிடுவதாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்தார். 

தொடர்ந்து அதே தொகுதியில் அதிமுக சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தற்போது அறிவித்துள்ளது. 

இந்த பின்னணியில், அதிமுக தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படாத சூழலில் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com