கமல் மற்றும் சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும்... கருணாஸ் பேட்டி
கமல் மற்றும் சீமான் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும் என்று கருணாஸ் கூறியுள்ளார்.

ஒடிசா இரயில் விபத்தில் தகவல் கிடைக்காத 6 பேர் பற்றி ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியது.
இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், நேற்று ஒடிசாவில் இருந்து கிளம்பும்போது எந்த தெளிவும் இல்லாமல் இருந்ததாகவும், இங்கே வந்து அரசு அதிகாரிகளிடம் பேசும் பொழுது அந்த 8 பேரும் பாதுகாப்பாக இருந்ததை அறிந்துகொண்தாக கூறினார். மேலும் அதில் 2 பேரிடம் பேசி விட்டதாகவும், மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். தொடர்ந்து மீதமுள்ள 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை என்பதால் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க:"இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழன் அதிமுக" ஜெயக்குமார் உருக்கம்!
நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறும் துணை வேந்தர்கள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ரவி, பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள் கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!
தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன் வருவதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த ஆளுநர், தமிழகத்தில் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதா? - இபிஎஸ் கண்டனம்!
அதேபோல், 7 முதல் 9 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியல் வரை பதிவாகக் கூடும் எனவும் கணித்துள்ளது.
அதிமுக இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழனாக இருந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் 128 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மசூதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உணர்வுப் பூர்வமான தோழனாக அதிமுக உள்ளதாக கூறினார். மேலும், காயிதே மில்லத் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட மேடையிலேயே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றியதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடு போதை வஸ்து மாநிலமாக மாறிவிட்டது எனவும் அவர் சாடிய அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்க மக்கள் அச்சப்படும் நிலை உருவாகி இருப்பதாக அவர் விமர்சித்தார்.
இதையும் படிக்க:கோடை விடுமுறை முடிந்தது: விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்...! கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்வு...!
சேலத்தில், வ.உ.சி. பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றக் கூறியதால், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில், ஈரடுக்கு கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகின்ற 11-ம் தேதி மற்றும் 12-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில், கலந்துக்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளானது, சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகரட்ச ஹாய் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக 11-ம் தேதி மாலை, புதிதாக கட்டப்பட்டுவரும் ஈரடுக்கு கொண்ட பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் நேரடியாக வருகை தந்து பார்வையிட இருப்பதால் இதற்கான முன்னேற்பாடு வேலைகளை அதிகாரிகள் துரிதயப்படுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அருகிலுள்ள கடைகளை அகற்றிவருகின்றனர்.
அதன்படி, சேலம் பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. பூ மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறி, கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க | கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர் உயர்வு...! மக்கள் அவதி...!