நான் சொல்லுவதை அனைத்தும் அவர் கேட்டார் அதைக் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை, அல்லது நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ஆலோசனை நடத்துவதாக கூறினார். உங்கள் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு மக்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று நான் கூறினேன் என்ற அவர், பணம் கொடுக்காமல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றவர். நல்ல விஷயத்தை செய்பவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் நல்லது. வரக்கூடிய காலத்தில் யார் மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களோ அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.