இதுவரை தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு!

இதுவரை தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாட்டில் 460 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை கனிமொழி எம்.பி,  அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பழங்குடியினர் மற்றும் அட்டவணை பிரிவினர் வசிக்கும் இடங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : வெளிமாநில தொழிலாளர்கள்: பொறாமையில் சிலர் வீண் வதந்தியை பரப்புகிறார்கள்...!

தமிழ்நாட்டில் இதுவரையில் 460 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 2000 திருக்கோவில்களில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய ஆட்சியாக இந்த ஆட்சி இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.