உடனே விடுங்கள்.. இல்லையென்றால் அது தான் நடக்கும்?? எச்சரிக்கை விடும் மீனவர்கள்!! இலங்கை கடற்படை ஓகே சொல்லுமா?

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட16 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

உடனே விடுங்கள்.. இல்லையென்றால் அது தான் நடக்கும்?? எச்சரிக்கை விடும் மீனவர்கள்!! இலங்கை கடற்படை ஓகே சொல்லுமா?

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு விசைபடகில் இருந்த 4 மீனவர்களையும், அதேபோன்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த  ஒரு விசைப்படகில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

இதையடுத்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் வரும் 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.