சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசுக்கப்பல்.. எச்சரித்து அனுப்பிய கடலோர காவல் படையினர்?

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசுக்கப்பல் 2ம் முறையாக புதுச்சேரியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசுக்கப்பல்.. எச்சரித்து அனுப்பிய கடலோர காவல் படையினர்?
Published on
Updated on
1 min read

சென்னை துறைமுகத்தில் இருந்து கோர்டிலியா குரூஸ் என்ற சொகுசு கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் அதில் சூதாட்டம் உள்ளிட்ட சீர்கேடான விஷயங்கள் இருப்பதாகக் கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரி சென்ற கப்பலை கடலோர காவல் படையினர் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் கப்பல் மீண்டும் இன்று காலை புதுச்சேரி சென்ற நிலையில், 2ம் முறையாக கடலோர காவல் படையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆழமற்ற பகுதியில் சொகுசுக்கப்பலை நிறுத்தி சிறிய கப்பல் மூலம் பயணிகளை புதுச்சேரிக்குள் அனுமதிக்கலாம் எனவும் இல்லையெனில் கரைப்பகுதியை மட்டுமே சுற்றிப்பார்த்து விட்டு செல்லும் சூழல் உருவாகும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com