சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி....! அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை...!

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி....! அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை...!
Published on
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நேற்று(18.11.2022) இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தமிழ் தேர்வு வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை செய்ய தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் - செயலர் கிருஷ்ணசாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவை உயர்கல்வித்துறை நியமித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் வினாத்தாள் மாறியது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்; இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும்; இது போன்ற தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள் அலுவலர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் குழுவின் விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதியை சென்னை பல்கலைக்கழகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com