முதல்வர் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியாராஜன் சமூக ஆர்வலர் புகார்

சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முதல்வர் கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியாராஜன்  சமூக ஆர்வலர் புகார்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார். தென் சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து வட சென்னை பகுதியான காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போது சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

சட்டத்தை மீறும் நபர்கள் மீது சட்டபடி நடவடிக்கை தேவை 

இந்தநிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா மற்றும் ஆர். கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் போக்குவரத்து மிதிகளை மீறி ஃபுட்போர்டு அடித்துக் கொண்டு பொதுவெளியில் சட்டத்தை மீறும் வகையில் நடந்ததற்காக சாலை விதிகளின் ஒழுங்குமுறைகள் 1989 (2), மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989 (3), மோட்டார் வாகன விதிமுறைகள் 1968 மற்றும்மோட்டார் வாகனச் சட்டம்1988 இன் பிரிவு 93க்கு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் படிக்க | திராவிட மாடல்” ஒருமாதிரி இருக்கு முதலமைச்சருக்கு அட்வைஸ் செய்த ஆளுநர்

மேலும் கண்ணியமிக்க அரசு துறையில் இருந்துக் கொண்டு சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை விதிகளை காற்றில் பறக்க விட்ட மேற்கூறிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கொருக்குப்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில் இணைய வழியில் புகார் அளித்துள்ளார்.