அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்? இன்று கூடும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்?  இன்று கூடும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. 

ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிமுக சட்டமன்ற கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏக்கள் தவிர, கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது