கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன் தபால், மின்னஞ்சல் மூலம் என மொத்தம் 86,342 மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும் சிலர் வேண்டும், வேண்டாம் என்ற ஒற்றை நிலைப்பாட்டை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் வேண்டாம் என்று விரிவாக கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுபோல் பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ராஜன் கூறினார். கிடைக்கப் பெற்றுள்ள கருத்துகளை ஆராய்ந்து விரிவான ஆய்வறிக்கையை தயாரிக்க வேண்டும்.