தமிழ்நாடு - ஒடிசா இடையே கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

தமிழ்நாடு - ஒடிசா இடையே கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து :

15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளை காணவும், ஒடிசா மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். இந்நிலையில் அவரது முன்னிலையில் இன்று ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையும் படிக்க : தமிழ்நாடு பெயரை மறுத்ததால் கமராஜருக்கு நிகழ்ந்தது என்ன.. ? ஆ.ராசா பேச்சு!

இந்த ஒப்பந்தமானது இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் , மேம்படுத்துவதற்கும் வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டர்கி, பொருளாளர்  சேகர் மனோகரன், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை செயலாளர் வினில் கிருஷ்ணன், ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் மதிவதனன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.