திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி பங்கேற்பு...!

திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி பங்கேற்பு...!

நீட் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து திமுக நடத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து மாணவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்து இருப்பதாக திமுக குற்றம் சாட்சி வரும் நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி திமுக இளைஞரணி, மாணவரணி மருத்துவர் அணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ராமநாதபுரத்தில் மீனவர் நல மாநாடு...பல ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!!

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதை போல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.