டி.பி.ஐ.வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு...!

டி.பி.ஐ.வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு...!
Published on
Updated on
1 min read

சென்னை : பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவையொட்டி டி.பி.ஐ.வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவச் சிலை திறக்கப்படும் என்றும், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை டிபிஐ வளாகத்தில், நூற்றாண்டை நினைவுகூறும் வகையில் நூற்றாண்டு வளைவையும், கல்வெட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com