தமிழகம், புதுச்சேரியில் 10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  முதல் பத்தாம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 10ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென் மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிலக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு  45 கி. மீ. வேகத்தில் இன்று தரைக்காற்று வீசலாம் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில்  சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.