நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. தாக்கலாகும் 24 மசோதாக்கள்!!

தமிழ்நாட்டின் திராவிடர், பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைக்கும் மசோதா உள்ளிட்ட, 24 மசோதாக்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. தாக்கலாகும் 24 மசோதாக்கள்!!

வரும் 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதில் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, ஆள்கடத்தல் தொடர்பான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா, மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா ஆகியவையும் பட்டியலிடப்பட்டுள்ளன.

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ ஆணைய மசோதா, பத்திரிகை மற்றும் பதிவு மசோதா, சுரங்கங்கள் மற்றம் கனிமங்கள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசமைப்பு திருத்த மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.