நடுக்கடலில் வீசிய மூடையில் 12 கிலோ மேல் தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு......

நடுக்கடலில் வீசிய  மூடையில் 12 கிலோ மேல் தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு......

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு 
மன்னர் வளைகுடா கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது, இதன்படி, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் தென் கடல் பகுதியில் 
நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் மதுரையில் நண்பர்களை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் வரை கடன்: மாஸ்டர் பிளான் செய்த கணவன் மனைவி தலைமறைவு

அப்போது மண்டபத்தைச் சேர்ந்த பைபர் படகு மண்டபம் தென் துறைமுகம் நோக்கி வந்தது.அப்படகை நிறுத்தி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது படகில் இருந்தவர்கள் படகில் இருந்து ஒரு மூடையை கடலில் எறிந்தனர். இதையடுத்து அப்படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். படகிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்க கட்டி கடத்தி வந்ததும், கடலில் ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூடையை கடலில் வீசியதும் தெரிந்தது.

மேலும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்ட மூன்று மாடி கட்டிடத்தில் NIA ஆய்வாளர் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.


இதன்படி படகில் இருந்து கடலில் வீசிய மூடையை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று அதிகாலை முதல் தேடினர். இந்நிலையில் தென் கடல் பகுதியில், கடல்நீர் விளையாட்டு வீரர்களின் தீவிர தேடுதலுக்கு பின் ஒரு மூடையை கண்டெடுத்தனர். அதில் 12 கிலோக்கு மேல் தங்கக்கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.