மூவர்ண கொடிக்கு சல்யூட் அடித்த யானை!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், சுதந்திர தினத்தை ஒட்டி, தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதற்கு கோவில் யானை தும்பிக்கை தூக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியது.

மூவர்ண கொடிக்கு சல்யூட் அடித்த யானை!

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோவில் முன்பு  சிறப்பு பூஜைகளுடன் தேசியக் கொடி ஏற்றி தீபாராதனை நடத்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்வின் போது கோவில் யானை பிளிரி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது. இந்த விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர்.

நாட்டின் 76 வது சுதந்திர தினம் நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறதுதமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 75வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே, இந்திய தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தேசிய கொடியை ஏற்றினார்.

அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி, தும்பிக்கையைத் தூக்கி, பிலிரி, தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை செய்தனர் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.