நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆவணி திருவிழா...! விமர்சையாக நடைபெற்ற கொடியேற்றம்...!

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆவணி மூலத்திருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆவணி திருவிழா...! விமர்சையாக நடைபெற்ற கொடியேற்றம்...!

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டிற்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாள் அன்று, சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு நெல்லை மாவட்டம் மானூர் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற விழா, நெல்லையப்பர் கோவில் உள்ளே அமைந்துள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சிக்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்கொடி பல்லக்கில் வைக்கப் பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இத்திருவிழாவின் 4ம் நாளான 29ந்தேதி அன்று சுவாமி அம்பாளின் ரிஷப வாகன திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 5ஆம் தேதி மானூரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.