தற்காலிக ஆசிரியர் நியமனம்.. புதிய வழிகாட்டுதல்கள் - தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!

தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து புதிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்.. புதிய வழிகாட்டுதல்கள் - தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!

முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முன்னதாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், நியமனம் தொடர்பான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றுபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு TRB-ஆல் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு அருகே வசிப்பவர்கள், மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் ஆகிய தகுதிகளின் அடிப்படையிலும் முன்னுரிமை வழங்கி பணி நியமனம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 4-ம் தேதி முதல் 6-ம்  தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.