”புதிய படங்கள் ரிலீஸ் - உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றது” - தமிழக அரசு

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது பொது அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்களின் ரசிகர் காட்சிகளை வரைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிக்க : நடிகை"ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய வேண்டும்" உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது பொது அமைதியை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.