"அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு சீட்டு வழங்காததால், உயிரிழப்பு ஏற்படுகிறது"  உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்!

"அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு சீட்டு வழங்காததால், உயிரிழப்பு ஏற்படுகிறது"  உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்!

அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு சீட்டு வழங்காததால், உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இதனால் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துளுக்கு உரிய சீட்டு வழங்க உத்தரவிட வேண்டியும்  உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். 

மதுரையைச் சேர்ந்த சிந்துஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "எனக்கு குழந்தை பிறந்து 45 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து. தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அருகில் இருக்கும் அங்கன்வாடிக்கு தடுப்பூசி செலுத்த சென்றேன். அங்கு பணியாற்றிய செவிலியர்  குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி ஒரு மருந்தினை கொடுத்து 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 3ml அளவு மருந்து வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

செவிலியரின் அறிவுறுத்தலின்படி எனது குழந்தைக்கு மருந்தினை வழங்கினேன். ஆனால் எனது குழந்தையின் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, அரசு மருத்துவரையும் செவிலியரின் அணுகி கேட்ட பொழுது அலட்சியமாக பதில் அளித்தனர். பின்னர், எனது குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பொழுது, "குழந்தைக்கு பாராசிட்டமால் மருந்தினை அதிகப்படியாக வழங்கியதாலே, இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது" என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் எனது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. 

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாகவே எனது குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சைக்கு மருந்து, மாத்திரை குறித்த  மருத்துவ சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனாலே தமிழகம் முழுவதிலும் பல்வேறு குழந்தைகள் இறப்பதாக செய்திகள் வெளி வருகிறது. எனவே மருத்துவரின் அலட்சியப் போக்கால் பாதிக்கப்பட்ட எனது குழந்தைக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை சிகிச்சை பெற வருபவர்களுக்கு முறையாக மருந்து மாத்திரை குறித்த  மருத்துவ சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்" என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க:செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு; 2 வது நாளாக இன்று விசாரணை!