இனி இங்கும் அனுமதி பெற்று மது அருந்தலாம்...!!!
திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அதன் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
உள்துறை செயலாளரான பனீந்திர ரெட்டி சமீபத்தில் தமிழ்நாடு அரசிதழில் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என்றும், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளதோடு, சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யப்பட்டு அது குறித்தும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்த நிலையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 10,260 காலிப்பணியிடங்கள்.... டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி!!