நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கோவிலில் சூழ்ந்த வெள்ள நீர்...

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மங்கலம் அருகே அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவிலை நீர் சூழ்ந்தது. இதில் கோவில் மூழ்கி உள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கோவிலில் சூழ்ந்த வெள்ள நீர்...

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் எடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது.

கொங்கு சோழர்கள் காலத்தில் 1000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படும் இந்த அணை நடுவே தியாகத்தின் உருவமாக நல்லம்மன் கோவில் அமைந்து உள்ளது. நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் புது வெள்ளம் பொங்கி பாய்கிறது. நல்லம்மன் தடுப்பணையில் அருவி போல ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. 

இதில் அணை நடுவே உள்ள நல்லம்மன் கோவில் மூழ்கி விட்டது. கோவிலை சுற்றி நீர் சூழ்ந்து உள்ளது. கோவிலுக்கு செல்லும் சிருபாலமும் மூழ்கி விட்டதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.