ஆம்னி பேருந்து, டெம்போ வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி!

காவல்கிணறு அருகே ஆம்னி பேருந்தும் காய்கறி ஏற்றி வந்த டெம்போ வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்னி பேருந்து, டெம்போ வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் பலி!

நெல்லை மாவட்டம், காவல்கிணறு தனியார் பல் மருத்துவமனை அருகே கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தும், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு நித்திரவிளை சென்ற டெம்போ வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது. இதில் டெம்போவில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து அருகில் இருந்த மின்மாற்றியில் மோதியது.

அதில் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.