வழிபறி கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலை.....

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஏரி அருகே பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வழிபறி கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொலை.....

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னளூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. சுங்கசாவடி ஊழியரான இவர் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவர், இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

நகையை பறிக்கொடுத்த இந்திராணி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் மர்மநபர்களை துரத்தி சென்று பிடிக்க முயற்சித்தனர். அப்போது மர்மநபர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களை நோக்கி சூடுவது போல் பாவனை செய்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் பயந்து சிதறி ஓடினர்.

பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பித்து சென்ற மர்மநபர்கள் இருவரும்,சுங்கசாவடி அருகில் இருந்த பென்னளூர் ஏரி பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். பின்னர் தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் சரக போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

ஏரி அருகே பதுங்கி இருந்த கொள்ளையர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் தேடி வந்த நிலையில், ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.