தொடர் விடுமுறை : 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on

தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் ஆயிரத்து 100 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.  

வருகிற 28-ந்தேதி மிலாடி நபி, வார விடுமுறை மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால், வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் ஆயிரத்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு இன்று கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com