சாலையில் சுற்றி திரியும் கரடியால் மக்கள் அச்சம்...!

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாலையில் சுற்றி திரியும் கரடியால் மக்கள் அச்சம்...!
Published on
Updated on
1 min read

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி அருகே  உயிலட்டி கிராமத்தில் 3 கரடிகள்  குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தன. இதனால் பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், வனதுறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இரண்டு கரடிகள் கூண்டில் சிக்கியது.
 
தற்போது ஒரு கரடி மட்டும் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த கரடி வனத்துறையினரிடம்   சிக்காமல், வாகனங்களை மறித்து உலா வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து கரடியை கண்காணிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com