வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்ட மக்கள்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்டுள்ளதால் வாக்கு எண்ணும் போது வாக்கு எண்ணும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்

வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்ட மக்கள்...

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கடந்த ஆறு மற்றும் ஒன்பதாம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 74 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் பகுதியில் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்குகளை தரம்பிரித்து எண்ணிக் கொண்டிருந்த பொழுது ஒரு சில வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டு பதிலாக தவறுதலாக வாக்காளர் அடையாள அட்டையை வாக்கு பெட்டிக்குள் போட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.