பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம்...!

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம்...!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் கண்டு விற்பனையாகி வருகிறது.

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 42 காசுகள் வரை உயர்ந்து ரூபாய் 103.82 விற்பனையாகி வருகிறது. மேலும் கன்னியாகுமரி , கிருஷ்ணகிரி ,திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரேல் ரூபாய் 102.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்விலையானது நேற்று விற்பனை செய்யப்பட்ட பெட்ரேல் விலையை விட 10 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இதனை அடுத்து  பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 104 வரை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

மேலும் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 41 காசுகள் உயர்ந்து ரூபாய் 95.44 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை அடுத்து           சில  மாவட்டங்களில் ரூபாய் 95 முதல் 96 வரை விற்பனை செய்யப்படுகிறது. முக்கியமாக  கன்னியாகுமரி , கிருஷ்ணகிரி ,திருவாரூர், வேலூர் விழுப்புரம் மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை சுற்று உயர்ந்தே காணப்படுகிறது.

இதையும் படிக்க :மத்திய அரசின் திட்டம் நடைமுறை...கால நீட்டிப்பு வழங்கக் கோரி போக்குவரத்துத் துறை கடிதம்!