காரில் குட்கா கடத்திய 3 பேரை கைது செய்த போலீஸ்...

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காரில் குட்கா கடத்திய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 214 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

காரில் குட்கா கடத்திய 3 பேரை கைது செய்த போலீஸ்...

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழியாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் காரில் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அதிரடி சோதனை மேற்க்கொண்ட போலீசார், சந்தேகத்தின்பேரில் வந்த மாருதி சுசுகி காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள 214 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த கம்பத்தை சேர்ந்த வெங்கடேசன், சுல்தான் இப்ராஹிம், பைசூல் ரகுமான் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.