ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறை? கைது செய்ய விரைந்த 6 தனிப்படைகள்!!.

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறை? கைது செய்ய விரைந்த 6 தனிப்படைகள்!!.
Published on
Updated on
1 min read

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து,  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தடைப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com