பொங்கல் பண்டிகை - முதலமைச்சர் இல்லத்தில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்..!

பொங்கல் பண்டிகை - முதலமைச்சர் இல்லத்தில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்..!

பொங்கல் வாழ்த்து சொல்ல ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு வருகை புரிந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கினார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல திருநாளன்று தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு 10 ரூபாய் கொடுத்து ஆசி வழங்குவது வழக்கம். கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக  தலைவராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் பொங்கல் பண்டிகை அன்று தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு 20 ரூபாய் வழங்கி வாழ்த்தி வந்தார்.

அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலை முதலே ஏராளமான நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். இல்லம் அந்த அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.