பொதுகுழுவிற்காக சென்னை வானகரத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்...!

பொதுகுழுவிற்காக சென்னை வானகரத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்...!
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை அதற்கு இடையூறு வந்தால் ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாட்டு பணிகள் தீவிரம்:

அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்களுக்கு இடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில், வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பந்தல் அமைப்பது, கூட்டத்திற்கு வரும் வாகனங்களை கையாள்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் ஆலோசனை:

இது ஒருபுறம் இருக்க, சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை அதற்கு இடையூறு ஏற்பட்டால் பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து திட்டமிட்டு வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு நடத்த அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் இத்தகைய மாற்று ஏற்பாட்டில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com