மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம்... 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம்... 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்த வானிலை மைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
 
06.07.2021 அன்று பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
07.07.2021 அன்று தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.  
 
08.07.2021 அன்று வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.  
 
09.07.2021மற்றும்10.07.2021 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல்) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
 
சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 
 
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு :
 
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 9செ. மீ., போளூர்  (திருவண்ணாமலை) 8செ. மீ., தாளவாடி (ஈரோடு), பந்தலூர் (நீலகிரி) தலா 5 செ. மீ.,  உசிலம்பட்டி (மதுரை) 4செ. மீ., காரைக்குடி  (சிவகங்கை) 3செ. மீ., ஊத்துக்குளி  (திருப்பூர்), பென்னாகரம்(தர்மபுரி) தலா 2 செ மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கலவை  (ராணிப்பேட்டை),  திருமயம்  (புதுக்கோட்டை) தலா  1 செ. மீ. அளவு மழை பெய்துள்ளது.
 
வங்கக்கடல்பகுதிகளில்  8ந்தேதி  தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 
9 மற்றும் 10ந்தேதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும்  ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 
அரிபிக்கடல் பகுதிகளில்  8ந் தேதி முதல் 10ந் தேதி வரை  கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
 
6ந்தேதி முதல்  முதல் 10ந் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.