ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.. வெறிச்சோடி காணப்படும் துறைமுகம்!!

மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.. வெறிச்சோடி காணப்படும் துறைமுகம்!!

இலங்கை கடற்படை அட்டூழியம்:

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் துறைமுகத்தில் நேற்று மீனவ சங்க கூட்டம் நடத்தினர். அதில் மீனவர்கள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை நங்கூரம் இட்டு கடலில் நிறுத்தி வைத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை:

மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை வசமுள்ள மீனவர்களையும் விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.