உடையும் நிலையில் தரைப்பாலங்கள்... தொடர் மழையால் ஏற்பட்டுள்ள அபாயம்...

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எசைனுர் பாலம் நந்திமங்கலம் தரைப்பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளது.

உடையும் நிலையில் தரைப்பாலங்கள்... தொடர் மழையால் ஏற்பட்டுள்ள அபாயம்...

தமிழகத்தில் தொடர்ந்து புயல் மழையால் ஏரிகளில் இருந்து நிரம்பி அதிகமான நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஏரி கால்வாய்கள் குறுக்கே கிராமங்களுக்குச் செல்லும் தரைபாலங்கள் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் மூழ்கி சேதமடைந்து உடையும் அபாய நிலையில் உள்ளது.

குறிப்பாக சோளிங்கர் அடுத்த எசையனூர் செல்லும் தரைப்பாலம் மூழ்கி உடையும் அபாய நிலையில் உள்ளது. அடுத்து நந்திமங்கலம் பஞ்சாயத்துக்கு செல்லும் தரைப்பாலமும் மூழ்கியதால், கிராம மக்கள் வெளியே வேலைகளுக்கு செல்ல முடியாமலும், பெண்களை உடன் வருபவர்கள் அழைத்துச் சென்று பாலத்தின் அந்தப்பக்கம் விடுவதாலும், கிராம மக்கள் பயந்து தங்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.