ஹரியானா மாநிலம் குருகிராமில் அதிவிரைவு அதிரடிப் படையினர் அணிவகுப்பு...!

ஹரியானா மாநிலம் குருகிராமில்  அதிவிரைவு அதிரடிப் படையினர் அணிவகுப்பு...!

ஹரியானா மாநிலம் குருகிராமில் அதிவிரைவு அதிரடிப் படையினர் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

குருகிராம் அருகேயுள்ள நூ பகுதியில் விஷ்வ இந்து பரிசத் நடத்திய யாத்திரை நடத்திய போது இருதரப்பினரிடையே பயங்கர கலவரம் நடைபெற்றது.

இதில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதனிடையே, கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

மேலும்  144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பத்ஷாபூரில் கலவரம் வெடித்ததில் வீடுகள் எரிக்கப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதியில் அதிவிரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தினர்.

இதையும் படிக்க   | விஷ்வ இந்து பரிஷத் போராட்டம் அறிவிப்பு; போலீஸ் குவிப்பு...!