ஸ்டாலின் உத்தரவு...முதலமைச்சரின் பாதுகாப்புக் காவலர்கள் குறைப்பு...!எதற்காக தெரியுமா?

ஸ்டாலின் உத்தரவு...முதலமைச்சரின் பாதுகாப்புக் காவலர்கள் குறைப்பு...!எதற்காக தெரியுமா?

முதலமைச்சர் செல்லும்போது அவரது பாதுகாப்புக்காக சாலைகளில் நிற்கும் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

பணியில் ஈடுபடும் காவலர்கள்:

பொதுவாகவே முதலமைச்சர் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் பாதுகாப்பிற்காக 20 அடிக்கு ஒரு காவலர் என்ற வகையில் போக்குவரத்தை சீர்செய்ய நிற்பது வழக்கம். அப்போது, காவலர்களுடன், போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபடுவார்கள். 

அதேபோல் , முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி செல்லும்போதும், அவர் செல்லக்கூடிய பகுதியின் சாலையில் சில மணிதுளிகள் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு, கான்வாய் வாகனம் எளிதில் செல்ல வழிவகை செய்வர்.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு:

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சாலை பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முக்கிய சந்திப்புகளில் மட்டும் கான்வாய் செல்லும் நேரத்தில், போக்குவரத்தை சீர் செய்ய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி:

பொதுமக்களின் நலனிற்காகவே சாலைகளில் முதலமைச்சர் செல்லும்போது பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.