வேலூர் அருகே மழைநீர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்பு...

வேலூர் அருகே மழைநீர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். 
வேலூர் அருகே மழைநீர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் படகுகள் மூலம்  மீட்பு...
Published on
Updated on
1 min read

கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. திடீர் நகர், கன்சால்பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், தங்க இடமின்றி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள  20-க்கும் மேற்பட்ட பழ மண்டிகள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் வெள்ள நீரில் சிக்கி தவிக்கும் மக்களை படகுகள் மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, மழை பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளின் காரும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com