" 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் .

" 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் .

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் கிராம திருவிழாக்களில் கலந்து கொள்வதையும், கோவில்களில் வழிபாடு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com