கொளத்தூரில் மழை நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து மக்கள் படகு மூலம் பாதுகாப்பாக வெளியேற்றம்...

சென்னை கொளத்தூரில் மழை நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து மக்கள் படகு மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கொளத்தூரில் மழை நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து மக்கள் படகு மூலம் பாதுகாப்பாக  வெளியேற்றம்...

சென்னையில் இடைவிடாது கொட்டி வரும் பெருமழையால் பெரும்பாலான பகுதிகள் தண்னீரில் தத்தளிக்கிறது. பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் மின்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதன்படி சென்னையின் கொளத்தூரில் பெரும்பாலான பகுதி கிட்ட தட்ட இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து இடுப்பளவுக்கு தேங்கி நிற்பதால் மக்கள் இருப்பிடங்கள் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீரானது கொளத்தூர் பகுதியில்  வெள்யேற வழியின்றி தேங்கியிருக்கும் நிலையில் தற்போது மேலும் மழை பொழிந்து வருவதால் கொளத்தூர் பகுதியே மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் மழை நீர் விடுகளுக்குள் புகுந்து இருப்பிடங்களை இழந்து வெள்ளத்தில் தத்தளித்த மக்கள் அனைவரும் படகு மூலம் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.