இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்த அவரை மாநகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றபோதிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது முககவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும், மக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை மாநகராட்சி நிச்சயம் செய்யும். அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.