பள்ளி மேலாண்மை கூட்டம்...பெற்றோர்களுக்கு முதலமைச்சா் வேண்டுகோள்!

பள்ளி மேலாண்மை கூட்டம்...பெற்றோர்களுக்கு முதலமைச்சா் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில்  அனைத்துப் பள்ளிகளிலும் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பெற்றோா்கள் குழந்தைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவா் எழுதியுள்ள கடிதத்தில், வருகின்ற ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நடுவானில் ஏர்இந்தியா அதிகாரியை அறைந்த பயணி...தரையிறங்கியதும் நடந்தது என்ன?

எனவே, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகள் படித்த அல்லது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கு பிள்ளைகளுடன் சென்று கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.