ஏற்கனவே மனைவிமீது பாராமுகமாக இருந்தவர், குடும்பத்தினர் மனைவிக்கு கொடுத்த தொல்லைகள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். கொடுமைகள் அதிகரிக்கவே தாங்க முடியாத பிரியதர்ஷினி மார்த்தாண்டம் போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, கோணம் அருகே தனி வீடு எடுத்து ராஜாஷெரினும், பிரியதர்ஷினியும் தனிக்குடித்தனம் நடத்திவந்த நிலையில், சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், நான் முதலில் போகிறேன், பிறகு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என பிரியதர்ஷினியிடம் கூறிவிட்டு சென்ற ராஜஷெரின் அதன்பிறகு வீட்டுப்பக்கமே வரவில்லை. போன் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலையில், சமைத்து சாப்பிடக்கூடிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத வீட்டில் பிரியதர்ஷினி சாப்பாடு கூட சரியாக இல்லாமல் தனியாக தவித்து வந்துள்ளார்.